Google News
‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ தொடர்பான முதல் கூட்டம் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு கடந்த செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டது. 1ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது
ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் கமிட்டி தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், சட்டத்துறை செயலாளர் நிதின் சந்திரா, சட்டத்துறை செயலாளர் ரீட்டா வசிஷ்டா மற்றும் பலர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்ற ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
முன்னதாக செப்டம்பர் 6 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர் டெல்லியில் உள்ள ராம்நாத் கோவிந்தை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
Discussion about this post