• Home
  • Yellowpages
  • Vaasthu
  • English
  • Shop
செவ்வாய்க்கிழமை, மே 30, 2023
  • Login
  • Register
Tamil Viveka Bharathi | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News | BJP News
  • Home
  • Tamil-Nadu
  • india
  • Sports
  • Political
  • Terrorism
  • Crime
  • EXCLUSIVE
  • Aanmeegam
  • World
  • Cinema
  • Health
No Result
View All Result
Tamil Viveka Bharathi | Tamil News | Latest Tamil News | Tamil News Live | Breaking News | BJP News
No Result
View All Result
Home Aanmeegam

சகல பாவங்களையும் போக்கும் ரத சப்தமி என்றால் என்ன தெரியுமா

Viveka Bharathi by Viveka Bharathi
பிப்ரவரி 7, 2022
in Aanmeegam, EXCLUSIVE, Notification, Vaasthu
Reading Time: 1 min read
A A
0
327
SHARES
436
VIEWS
Share on FacebookShare on Twitter

Google News

Viveka Bharathi
Viveka Bharathi
Live 621 followers

பீஷ்மருக்கு விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என வரமிருந்தது. ஆனால் அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லையே ஏன்? மனதுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் பீஷ்மர். அப்போது  அங்கே வந்தார் வேத வியாசர்.

வியாசரைக் கண்டதும் அவரிடம் பீஷ்மர், ”நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பியபடி ஏன்  இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருந்தினார். அதற்கு வியாசர், ”பீஷ்மா, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால்  இன்னொருவருக்குத் தீமை, அநீதிகளை செய்வது மட்டுமல்ல, செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும்கூட பாவம்தான். அதற்கான  தண்டனையையும் அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில்தான் இப்போது தண்டனையை அனுபவித்துக்  கொண்டிருக்கிறீர்கள். உடல் அளவில் அவஸ்தைப்பட்டாலும், அதை விட உள்ளம் படாத பாடுபடும். அந்த வேதனையே பெரும்  தண்டனைதான்” என்றார்.

Related posts

கன்யாகுமரி மாவட்டத்தில் வாள்வச்சகோட்டம் மகிஷாசுரமாதினி வரலாறு

கன்யாகுமரி மாவட்டத்தில் வாள்வச்சகோட்டம் மகிஷாசுரமாதினி வரலாறு

மே 30, 2023
சோழர் கால செங்கோல் குறித்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த போட்டி

சோழர் கால செங்கோல் குறித்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த போட்டி

மே 25, 2023

பீஷமருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன்  துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை.  அந்த அவையில் பீஷ்மரும் இருந்தார். ஒரு மாபெரும் அநியாயம் நடந்தும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும், அதைத்  தடுக்காமல் போனதன் காரணமாகத்தான் இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவிப்பதை உணர்ந்தார் பீஷ்மர்.

வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், ”இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டார்.

”யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று  உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது. எனவே, பீஷ்மா, நீ எப்போது உன்னுடைய  பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது உன்னிடமிருந்து அகன்றுவிட்டது. இருந்தாலும் திரவுபதி “கண்ணா, என்னைக்  காப்பாற்றமாட்டாயா என்று துரியோதனன் அவையில் கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன்  செவிகள், கூர்மையான பார்வையிருந்தும் பார்த்தும் பாராததுபோல் இருந்த உன் கண்கள், நீ  சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற  நிலையிலும் தட்டிக்கேட்காத உன் வாய், உன்னிடமிருந்த அளப்பரிய தோள் வலிமையை சரியான நேரத்தில் உபயோகிக்காமலிருந்த  உன் வலுவான தோள்கள், வாளையெடுத்து எச்சரிக்கைவிடாத உன் உறுதியான இரு கைகள், ஆரோக்கியமுடன் அமர்ந்திருந்தபோது  இருக்கையிலிருந்து எழாமல் இருந்த உன் இரு கால்கள், நல்லது எது? கெட்டது எது என்று யோசிக்காத உன் புத்தி இருக்கும் இடமான  உன் தலை ஆகியவற்றுக்கும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் என்பது விதி” என்றார்.

அப்படியென்றால் என்னுடைய இந்த  அங்கங்களையும் பொசுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியன்தான். சாதாரண அக்னியின் சூடு போதாது. என் அங்கங்களைத்  தீய்க்க சூரியசக்தியைப் பிழிந்து தாருங்கள்” என்று தன்னிலை உணர்ந்து வேதவியாசரிடம் வேண்டினார் பீஷ்மர்.

உடனே வேதவியாசர் முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, ”பீஷ்மா, இந்த எருக்கன்  இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில்  உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்றவர்,  அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன  அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.

‘பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்துவிட்டாரே, அவருக்கு யார் பித்ருக் கடன் செய்வது?’ என்று தர்மர் வருந்தினார். தர்மருடைய வருத்தத்தைத் தெரிந்துகொண்ட வியாசர்,   ”தர்மரே வருந்த வேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான  பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஓர் உயர்நிலைக்குப்  போய்விடுகிறார்கள். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள்தான் பாவிகள். ஆனால் பீஷ்மர் தன் வாக்கு தவறாத  தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன்  இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வார்கள். அதோடு பீஷ்மருக்கு  நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும்” என்று வியாசர் கூறினார்.

எனவே ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி  நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரத சப்தமியில்  போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி  என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும்  செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கை.

குளிக்கும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி !
ஸத்வரம் யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச மாகரீ ஹந்து  ஸப்தமீ நெளமி ஸப்தமி !
தேவி!  த்வாம் ஸப்த லோகைக மாதரம்  ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய !

ரத சப்தமி நாளில் ஸ்நானம் செய்யும் முறையும் வழிபடும் முறையும்:

ரத சப்தமியன்று காலை குளிக்கும்போது சூரியனுக்குப் பிடித்த எருக்கன் இலைகளை ஏழு அல்லது ஒன்பது எண்ணிக்கையில் எடுத்து அடுக்கி, அதன்மீது அட்சதை, எள் வைக்க வேண்டும். ஆணுக்கு அதனுடன் விபூதியும், பெண்ணுக்கு அதனுடன் மஞ்சள் பொடியும் வைக்க வேண்டும். இவ்விலை அடுக்கைத் தலைமீது வைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால், மின்சாரம் எப்படி உலோகக் கம்பி வழியே பாய்கிறதோ, அப்படி சூரியனின் ஏழு வகைக் கதிர்கள் அன்று மட்டும் எருக்கன் இலை வழியே இழுக்கப்பட்டு விரைவில் நம் உடலில் பாய்ந்து, உடல் உபாதைகளையும் நோய்களையும் நீக்குகிறது என்றுதான் நம் முன்னோர்கள் இதைச் செய்தனர். நாமும் அதையே பின்பற்றி மேற்கூறிய பலனை அடையலாமே.

இப்படிக் குளித்தபின் வீட்டில் சூரியஒளி படும் சுத்தமான இடத்தில் செம்மண்ணால் மெழுகி சூரிய ரத கோலமிட்டு, அதில் சூரிய- சந்திரர்களை வரைய வேண்டும். பின் வண்ண மலர்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். இதற்குமுன் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, வெல்லம் வைத்து, நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடையும் வைக்க வேண்டும். அதன்பின் முதலில் கணபதி பூஜை, பின் சூரிய நாராயண பூஜை செய்ய வேண்டும். ஷோடச உபசாரத்துடன் இப்பூஜையைச் செய்தால் சூரியன் சாந்தியடைந்து உலகிற்கு நன்மை செய்வதுடன், பூஜிப்பவர்களுக்கும் வளமும் நலமும் தந்து சிறப்பாக வாழ வைப்பான்.

சூரிய வழிபாடு ஆதிகாலம் முதல் உள்ளது. சூரிய வழிபாட்டிற்கு மந்திரம் தெரியாவிடில் பரவாயில்லை. எளிமையாக, “ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று காலை சூரியனைப் பார்த்துக் கூறி, மூன்று முறை வணங்க வேண்டும்.

Related

Previous Post

சதுர்த்தி நாளில், விநாயகப்பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்….

Next Post

12 ராசிக்காரர்களும் தடையில்லா வருமானத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரம்

RelatedPosts

கன்யாகுமரி மாவட்டத்தில் வாள்வச்சகோட்டம் மகிஷாசுரமாதினி வரலாறு

கன்யாகுமரி மாவட்டத்தில் வாள்வச்சகோட்டம் மகிஷாசுரமாதினி வரலாறு

மே 30, 2023
சோழர் கால செங்கோல் குறித்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த போட்டி

சோழர் கால செங்கோல் குறித்து, செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த போட்டி

மே 25, 2023
பாஜக துணைத் தலைவர் பழ.கனகராஜுக்கு, இந்து முன்னணி கண்டனம்….

பாஜக துணைத் தலைவர் பழ.கனகராஜுக்கு, இந்து முன்னணி கண்டனம்….

மே 25, 2023
நட்புப் பேச்சாளர், செந்தில் பாலாஜியை நம்பி ஏமாற்றம் அடைந்த முதல்வர் ஸ்டாலின்…!

செந்தில் பாலாஜி எச்சரிக்கை, திமுக என்ன செய்யப் போகிறது…?

மே 24, 2023
நட்புப் பேச்சாளர், செந்தில் பாலாஜியை நம்பி ஏமாற்றம் அடைந்த முதல்வர் ஸ்டாலின்…!

காவல்துறை, இந்த வாரம் கம்யூனிஸ்ட் கட்சியை உன்னிப்பாகக் கவனித்தது ஏன்…?

மே 24, 2023
அனைத்துப் பள்ளிகளிலும், தமிழைக் கட்டாய மொழிப் பாடமாக்க தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும், தமிழைக் கட்டாய மொழிப் பாடமாக்க தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு

மே 24, 2023
தமிழகத்தில் பணக்கார நகரம் எது தெரியுமா…?

கன்யாகுமரி திரிவேணி சங்கமத்தில் நடைபெறவுள்ள ‘குமரி திருவிழா 2023’ தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

மே 24, 2023
சுடான் 30 ஆண்டுகால இஸ்லாமிய சட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது…

சுடான் 30 ஆண்டுகால இஸ்லாமிய சட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது…

மே 23, 2023
தமிழகத்தில் பணக்கார நகரம் எது தெரியுமா…?

தமிழகத்தில் பணக்கார நகரம் எது தெரியுமா…?

மே 23, 2023
நரேந்திர மோடிக்கு, எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தொடர்பாக 6 பேரை டெல்லி போலீசார் கைது….

பாஜகவின் 100 படைப்புகளை சொல்கிறேன்.…

மே 23, 2023
Next Post

12 ராசிக்காரர்களும் தடையில்லா வருமானத்திற்கு செய்ய வேண்டிய பரிகாரம்

மாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த நாட்கள்

Discussion about this post

RECOMMENDED NEWS

அனைத்து கட்சி கூட்ட மேடையில், நடிகர்களாக பங்கேற்க பா.ஜ.க விரும்பவில்லை, தலைவர் அண்ணாமலை அதிரடி

குடும்ப நிறுவனத்துக்காக, அரசு கேபிள் நிறுவனத்தை பலி செய்ய நினைக்கிறதா திமுக அரசு… அண்ணாமலை அதிரடி கேள்வி

6 மாதங்கள் ago

பா.ஜ.க.வை வம்புக்கிழுத்து வரும், சீமானுக்கு அழுத்தம் விழுந்துள்ள நிலையில், விரைவில், பிரச்சனை சூழ்ந்துகொள்ளலாம்…. யூக தகவல்

7 மாதங்கள் ago

ஜெயலலிதா மரணம், ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையின்படி, சசிகலாவுக்கு எதிராக டெல்லியில் ஆயுதம்…எடப்பாடி பழனிசாமி திட்டம்…

7 மாதங்கள் ago
அண்ணாமலை மற்றும் செல்வகுமார், மீது காயத்ரி ரகுராம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டு…

அண்ணாமலை மற்றும் செல்வகுமார், மீது காயத்ரி ரகுராம் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றச்சாட்டு…

6 மாதங்கள் ago

BROWSE BY TOPICS

Aanmeegam Admk all tamil news Amit-Shah Astrology astrology news in tamil best vasthu consultant Kanyakumari Bjp Budget Travel business Cinema Congress Crime dailyprompt Delhi DMK Doctor Terawan Exclusive Health home vasthu Horoscope india india tamil news Investigation lifestyle Modi Notification office vasthu One-Minute-News online tamil news Operation Political Political news Political tamil news pongal Real-News rss sports Tamil-Nadu tamil news portal Terrorism thatstamil vasthu for house World world tamil news
Telegram Join

Web Stories

நேஹா மாலிக்கின் அடுத்த நிலை ஹாட் பிகினி படங்கள்
நேஹா மாலிக்கின் அடுத்த நிலை ஹாட் பிகினி படங்கள்
பூஜா பாலேகரின் மற்றொரு லெவல் ஹாட் பிகினி படங்கள்
பூஜா பாலேகரின் மற்றொரு லெவல் ஹாட் பிகினி படங்கள்
வெளியில குளியல், ஓபன் ஷவரில் உல்லாசம் அடைந்த பூஜா பலேக்கர்
வெளியில குளியல், ஓபன் ஷவரில் உல்லாசம் அடைந்த பூஜா பலேக்கர்
பாலிவுட் நடிகை அப்சரா ராணியின், தீவிர கவர்ச்சி புகைப்படங்கள்
பாலிவுட் நடிகை அப்சரா ராணியின், தீவிர கவர்ச்சி புகைப்படங்கள்
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு மனம் திறந்த ராக்ஷி அகர்வால்
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு மனம் திறந்த ராக்ஷி அகர்வால்
மனெலிக் கோன்சலஸ் அசத்தலான புகைப்படங்கள்
மனெலிக் கோன்சலஸ் அசத்தலான புகைப்படங்கள்
நடிகை ஆயிஷா ஷர்மா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட் போட்டோ
நடிகை ஆயிஷா ஷர்மா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட் போட்டோ
பிகினியில் மஜா போஸ், நேஹா மாலிக்கின் அற்புதமான படங்கள்
பிகினியில் மஜா போஸ், நேஹா மாலிக்கின் அற்புதமான படங்கள்
பிகினியில் நடிகை திஷா பதானி புகைப்படங்கள்
பிகினியில் நடிகை திஷா பதானி புகைப்படங்கள்
பிகினியில் நடிகை சோனி சரிஷ்டாயின் கலக்கல் புகைப்படங்கள்
பிகினியில் நடிகை சோனி சரிஷ்டாயின் கலக்கல் புகைப்படங்கள்
View all stories

POPULAR NEWS

    Web Stories

    நேஹா மாலிக்கின் அடுத்த நிலை ஹாட் பிகினி படங்கள்
    நேஹா மாலிக்கின் அடுத்த நிலை ஹாட் பிகினி படங்கள்
    பூஜா பாலேகரின் மற்றொரு லெவல் ஹாட் பிகினி படங்கள்
    பூஜா பாலேகரின் மற்றொரு லெவல் ஹாட் பிகினி படங்கள்
    வெளியில குளியல், ஓபன் ஷவரில் உல்லாசம் அடைந்த பூஜா பலேக்கர்
    வெளியில குளியல், ஓபன் ஷவரில் உல்லாசம் அடைந்த பூஜா பலேக்கர்
    பாலிவுட் நடிகை அப்சரா ராணியின், தீவிர கவர்ச்சி புகைப்படங்கள்
    பாலிவுட் நடிகை அப்சரா ராணியின், தீவிர கவர்ச்சி புகைப்படங்கள்
    கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு மனம் திறந்த ராக்ஷி அகர்வால்
    கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு மனம் திறந்த ராக்ஷி அகர்வால்
    மனெலிக் கோன்சலஸ் அசத்தலான புகைப்படங்கள்
    மனெலிக் கோன்சலஸ் அசத்தலான புகைப்படங்கள்
    நடிகை ஆயிஷா ஷர்மா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட் போட்டோ
    நடிகை ஆயிஷா ஷர்மா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட் போட்டோ
    பிகினியில் மஜா போஸ், நேஹா மாலிக்கின் அற்புதமான படங்கள்
    பிகினியில் மஜா போஸ், நேஹா மாலிக்கின் அற்புதமான படங்கள்
    பிகினியில் நடிகை திஷா பதானி புகைப்படங்கள்
    பிகினியில் நடிகை திஷா பதானி புகைப்படங்கள்
    பிகினியில் நடிகை சோனி சரிஷ்டாயின் கலக்கல் புகைப்படங்கள்
    பிகினியில் நடிகை சோனி சரிஷ்டாயின் கலக்கல் புகைப்படங்கள்
    View all stories

    About

    ஒரு தமிழ் ஊடகம், விவேக பாரதி ஒரு தமிழ் மொழி பிரசுரங்கள் சிறப்பு செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு, பாடல்கள், வாஸ்து, அரசியல், பக்தி சார்ந்த நிகழ்ச்சிகள்... அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் படிக்க: https://tamil.vivekabharathi.com/

    Recent News

    • கன்யாகுமரி மாவட்டத்தில் வாள்வச்சகோட்டம் மகிஷாசுரமாதினி வரலாறு
    • செந்தில் பாலாஜி மீது நடந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு, இரண்டு முக்கிய காரணங்கள்
    • லஞ்ச ஒழிப்பு துறை எதற்கு, சட்டம் எதற்கு என கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்… அதிர்ச்சியில் ஆளும் கட்சி

    Category

    • Aanmeegam
    • Bjp
    • Business
    • Cinema
    • Crime
    • EXCLUSIVE
    • Health
    • india
    • Kanyakumari
    • Modi
    • Notification
    • Political
    • Pongal
    • Sports
    • Tamil-Nadu
    • Terrorism
    • Uncategorized
    • Vaasthu
    • vivekabharathi
    • World

    Important Links

    • CONTACT DETAILS
    • Privacy Policy
    • About Us

    Recent News

    கன்யாகுமரி மாவட்டத்தில் வாள்வச்சகோட்டம் மகிஷாசுரமாதினி வரலாறு

    கன்யாகுமரி மாவட்டத்தில் வாள்வச்சகோட்டம் மகிஷாசுரமாதினி வரலாறு

    மே 30, 2023
    செந்தில் பாலாஜி மீது நடந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு, இரண்டு முக்கிய காரணங்கள்

    செந்தில் பாலாஜி மீது நடந்த வருமான வரித்துறை ரெய்டுக்கு, இரண்டு முக்கிய காரணங்கள்

    மே 27, 2023
    • English
    • Shop
    • Vaasthu
    • Yellow Pages
    • Privacy Policy
    • About Us
    • CONTACT DETAILS

    © 2016 - 2023 Copyright Viveka Bharathi All Rights Reserved

    No Result
    View All Result
    • Home
    • Tamil-Nadu
    • Political
    • Aanmeegam
    • india
    • Business
    • Sports
    • Crime
    • Terrorism
    • EXCLUSIVE
    • World
    • Cinema
    • Health

    © 2016 - 2023 Copyright Viveka Bharathi All Rights Reserved

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password? Sign Up

    Create New Account!

    Fill the forms below to register

    All fields are required. Log In

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    நேஹா மாலிக்கின் அடுத்த நிலை ஹாட் பிகினி படங்கள் பூஜா பாலேகரின் மற்றொரு லெவல் ஹாட் பிகினி படங்கள் வெளியில குளியல், ஓபன் ஷவரில் உல்லாசம் அடைந்த பூஜா பலேக்கர் பாலிவுட் நடிகை அப்சரா ராணியின், தீவிர கவர்ச்சி புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு மனம் திறந்த ராக்ஷி அகர்வால் மனெலிக் கோன்சலஸ் அசத்தலான புகைப்படங்கள் நடிகை ஆயிஷா ஷர்மா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட் போட்டோ பிகினியில் மஜா போஸ், நேஹா மாலிக்கின் அற்புதமான படங்கள் பிகினியில் நடிகை திஷா பதானி புகைப்படங்கள் பிகினியில் நடிகை சோனி சரிஷ்டாயின் கலக்கல் புகைப்படங்கள்
    நேஹா மாலிக்கின் அடுத்த நிலை ஹாட் பிகினி படங்கள் பூஜா பாலேகரின் மற்றொரு லெவல் ஹாட் பிகினி படங்கள் வெளியில குளியல், ஓபன் ஷவரில் உல்லாசம் அடைந்த பூஜா பலேக்கர் பாலிவுட் நடிகை அப்சரா ராணியின், தீவிர கவர்ச்சி புகைப்படங்கள் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு மனம் திறந்த ராக்ஷி அகர்வால் மனெலிக் கோன்சலஸ் அசத்தலான புகைப்படங்கள் நடிகை ஆயிஷா ஷர்மா கடற்கரையில் நீச்சல் உடையில் ஹாட் போட்டோ பிகினியில் மஜா போஸ், நேஹா மாலிக்கின் அற்புதமான படங்கள் பிகினியில் நடிகை திஷா பதானி புகைப்படங்கள் பிகினியில் நடிகை சோனி சரிஷ்டாயின் கலக்கல் புகைப்படங்கள்