Google News
சித்ரா பௌர்ணமியான இன்று விரதம் இருந்து சித்திரகுப்தரை முறையாக வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகள் என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மாலையில் தான் சித்ரா பௌர்ணமி பூஜை செய்வது வழக்கம். ஆகையால் மாலை வரை விரதம் இருப்பது நல்லது. விரதம் இருக்க இயலாதவர்கள் பால் பழம் உண்ணலாம். உணவு உன்ன நினைத்தால் உப்பில்லாத உணவை உண்ணலாம். நாள் முழுவதும் சித்ர குப்தனின் நாமத்தை ஜபிப்பது நல்லது. சித்ரா பௌர்ணமி விரதத்தினை முழுமையாக இருப்போர்கள் இரவு சித்திரை நிலவை பார்த்த பிறகு உணவு உண்ணலாம்.
சித்ரா பௌர்ணமியன்று சித்திர குப்தரை வழிபடுபவர்களுக்கு சித்திரகுப்தர் நல்வழி காட்டுவார். சித்ரா பௌர்ணமி அன்று பௌர்ணமி நிலா வெளிச்சத்தில் குடும்பத்துடன் அமைந்து சித்ரான்னம் எனப்படும் கலவை சாதங்களை சாப்பிட வேண்டும். ஆறு, குளம், ஏரி போன்ற இடங்களில் இருப்பவர்கள் அதன் அருகாமையில் அமர்ந்து இவ்வாறு செய்வது மிகவும் நல்லது. அப்படி முடியாதவர்கள் உங்கள் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து பௌர்ணமியில் நிலவின் கதிர் வீச்சுகளை உள்வாங்கி மனதார சித்ரகுப்தரை வணங்கி குடும்பத்துடன் உணவு உண்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அன்றைய நாளில் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா போன்றவற்றை வாங்கி தானம் செய்யுங்கள்.
சித்ரா பௌர்ணமி நாளில் விரதம் இருப்பதன் மூலம் குழந்தைகளின் கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளும் படிப்படியாக குறையும். நீண்டநாள் வழக்கு நமக்கு சாதகமாக முடியும். இந்த நன்னாளில் பலர் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கம். அதன் மூலம் மிக சிறந்த பலன்கள் கிடைக்கும். அதோடு கிரிவலம் செல்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதன் மூலம் மிக மிக அரிதான பலன்களை நாம் பெற இயலும்.
Discussion about this post